செய்முறை :
விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கால்களையும் இணையாக தலைக்கு மேல் செங்குத்தாக தூக்கவும். இரு கால்களையும் தலைக்கு பின்னால் கொண்டு போய்விடுங்கள். இப்போது இடுப்புபகுதி தூக்கியவாறு இருக்கும். இடுப்பு பகுதியை தூக்கியபின் இரு உள்ளங்கைகளையும் நடுமுதுகில் வையுங்கள்.
கால்களை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி செங்குத்தாக நேர்க்கோட்டில் நிறுத்தவும். உங்களின் கண்கள் மேலிருக்கும் இரு கால்கட்டை விரல்களை பார்க்கட்டும். கீழ்த்தாடைப்பகுதி நெஞ்சில் ஒட்டியிருக்க வேண்டும். கழுத்து பிடரி சரியாய் தரையில் படிய அமையுங்கள்.
ஆசனத்தின் போது உடலியக்கத்துடன் சுவாசமும் இயல்பாய் இருப்பது அவசியம்! இந்த ஆசனத்தை 3 முறை செய்தால் போதுமானது. அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், இதய நோய்கள், கழுத்து பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. ஆசனத்தில் இருக்கும் போது தலையினை பக்கவாட்டில் திரும்பி பார்க்ககூடாது.
பயன்கள் :
தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும். மூலநோய், குடல்வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம், அஜீரணம், மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது. தூக்கமின்மை சரியாகும். அதிக தூக்கம் குறையும். ஆரம்ப கட்ட ஹெர்னியா கர்ப்பப்பை இறக்கம் சரியாகும். வளர்சிதை மாற்றம் கட்டுப்படும்.

No comments:
Post a Comment